நிதிஷ் குமார் ஏன் “இந்தியா” கூட்டணியில் இருந்து விலகினார் என்பது எனக்கு புரிகிறது. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி காங்கிரஸும், ராஷ்டிரிய ஜனதா தளமும் நிதிஷ் குமாரை வற்புறுத்தினோம். ஆனால் இந்த கணக்கெடுப்பு பாஜகவிற்கு பயத்தை உண்டாக்கியது. பாஜக சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள் என்பதால், நிதிஷ் குமாருக்கு பாஜக பின்வாசலைத் திறந்துவிட்டுள்ளது.